இடது ஜனநாயக முன்னணி அரசின் நான்காண்டுகள்
கேரளாவில் மே 25 அன்று இடது ஜன நாயக முன்னணி அரசாங்கம் அரசு நான்கு ஆண்டு காலத்தை மிகவும் குறிப்பிடத்தக்க விதத்தில் சிறப்பான முறையில் ஒரு முன்மாதிரியான அரசாங்கமாக நிறைவு செய்திருக்கிறது. உலகம் முழுவதும் ஒரு சவாலாக எழுந் துள்ள கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை மாநில அரசாங்கம் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் நம் நாட்டிலும் உலகிலும் மிகவும் விரிவான அளவில் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறது.
கேரளா மிகவும் வலுவான முறையில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலைச் சந்தித்திருக்கிறது.கேரளாவின் சாதனையை, தனிப்பட்ட ஒரு விஷயமாகப் பார்க்கக்கூடாது. இதற்குப்பின்னால் அதன் வரலாறும் மற்றும் அதன் சமூக - அரசியல் பின்னணியும் அமைந்திருக்கின்றன.
இந்தியாவின் இதர மாநிலங்களைவிட கேரள மாநிலம், மிகச் சிறந்த முறையில் பொது சுகாதார அமைப்பு முறையைப் பெற்றிருக்கிறது என்பதை அனைவரும் அங்கீகரிக்கிறார்கள். மத்திய அரசின் ‘நிட்டி ஆயோக்’ நிறுவனம் வெளியிட்டுள்ள சுகாதார அட்டவணையில், கேர ளாவை மாநிலங்களின் பட்டியலில் உச்சத்தில் வைத்திருக்கி றது. கேரளாவில் பொது சுகாதார அமைப்பு முறை பல பத்தாண்டுகளாகவே எழுப்பப்பட்டு வந்திருக்கிறது. ஆனாலும், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம்தான் அதனை நவீனப்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் விடாது முயற்சிகளை மேற்கொண்டுவந்தது.
இடது ஜனநாயக முன்னணியின் நான்காண்டு கால ஆட்சி, மாநிலத்தின் வரலாற்றில் ஈடிணையற்றது. மாநில அரசு நிர்வாக எந்திரத்தின் வல்லமை இப்போது சோதித்துப் பார்க்கப்பட்ட அளவிற்கு இதற்கு முன் இருந்ததில்லை. கடந்த நான்கு ஆண்டுகளிலும், ஒன்றன்பின் மற்றொன்று என, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெருக்கடிகள் முட்டி மோதிக்கொண்டு வந்தன. 2017 ஒக்கிப் புயல், மாநி லத்தின் சில பகுதிகளில் 2018 நிபா வைரஸ் தொற்று ஆகி யவைக் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தின. 2018 வெள்ளமும் மாநிலத்தின் பல மாவட்டங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி, ஸ்தம்பிக்க வைத்தன. 2019இலும் வெள்ளம் ஏற்பட்டது எனினும், அது 2018இல் ஏற்படுத்திய அளவிற்கு சேதத்தை ஏற்படுத்திடவில்லை. இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போன்று இப்போது கொரோனா வைரஸ் தொற்று தீவிரமான முறையில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இவ்வளவு நெருக்கடிகள் ஒன்றன்பின் மற்றொன்று என வந்தபோதிலும், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் இவை அனைத்தையும் அரசின் நிறுவனங்கள் மீதும், மக்க ளின் பங்களிப்பு மீதும் நம்பிக்கை வைத்து, கேரள மக்க ளுக்கு தான் அளித்த உறுதிமொழிக்கு உறுதியாக நின்று வெற்றிகரமான முறையில் தீர்த்து வைத்தது, தீர்த்து வைத்துக்கொண்டுமிருக்கிறது. ஒவ்வொரு நெருக்கடியை யுமே மிகவும் உன்னிப்பான முறையில் கையாண்டதும், அந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண் டிருப்பதும் இந்த அரசாங்கத்தின் தனிமுத்திரையாக மாறி இருக்கிறது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையின்கீழ் ஒவ்வொரு நெருக்கடியையும் அது கையாண்ட விதம் குறித்து கேரளா பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டு தல்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறது. 2018இல் வெள்ளம் வந்த சமயத்தில், மக்களைப் பாதுகாத்திடவும், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் கேரள அரசாங்கமும், மக்களும் மிகவும் விதிவிலக்கான முறை யில் திறமைகளைக் காட்டினார்கள். மக்களுடன் இணைந்து நின்று அரசாங்கம் வெள்ள நெருக்கடியை மிகவும் விரை வாகச் சமாளித்த விதம் பலராலும் பாராட்டப்பட்டன. கேரளா, இப்போது மீண்டும் ஒருமுறை, கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றைக் கையாளும் விதத்திற்காக, பலர் மத்தி யிலிருந்தும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இவை அனைத்தும் ஒரு வலுவான, மக்களுக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்ற, மக்கள் சார்ந்த அரசாங்கத்திற்கான உதாரணங்களாகும்.
இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள உறுதிமொழிகளின் அடிப்படையில், பொதுக் கல்வி மற்றும் சுகாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் மற்றும் உயர்த்துவதற்கும், பொது நடவடிக்கைகளின் வளமான மரபுகளின் ஒரு பகுதியாக சமூக நலன் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கான வலைப்பின்னலைக் கட்டி எழுப்புவதற்கும், அவற்றின் மூலம் பொருளாதாரத்தில் உற்பத்தித் துறைகளுக்கு ஊக்கம் அளிப்பதற்கும் நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இத்தகைய நடவடிக்கைகளின் ஆதாயங்கள் அனைத்தும் மக்களுக்கும் விரைவாகச் சென்றடைவதை உத்தரவாதப்படுத்தும் விதத்திலும் அரசாங்கம் வலு வாகவும், காலத்தேயும் முயற்சிகளை மேற்கொண்டது.
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள உறுதிமொழி களைக் கொள்கையாக மாற்றுவதிலும், அவற்றைச் செய்வதற்கு ஏற்றவிதத்தில் அரசாங்கத்தின் பல்வேறு துறைகளையும் நிறுவனங்களையும் ஒருங்கிணைப்பதி லும் திட்டமிடலின் நேர்த்தி அடங்கியிருக்கிறது.
கேரளா மட்டுமே, ஐந்தாண்டுத் திட்டத்தை, ரத்துசெய்தி டாமல் திட்டச்செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிற் கான முக்கியமான நிறுவனமாகவும், பொது நடவடிக்கைக ளுக்கான முக்கிய ஒரு கருவியாகவும், தொடர்ந்து இருத்தி வைத்திருக்கும் மாநிலமாகும்.
மாநிலத்தில் திட்டமிடலைப் பரவலாக்கிய முறையும் அதனை வலுப்படுத்துவதற்கு உதவியிருக்கிறது. இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம்தான் அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தது. அவ்வாறு அதிகாரங்களைப் பரவலாக்கியதில், கேரளம் இன்றையதினம் ஒரு முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது. இப்போதுள்ள அரசாங்கம் 2016இல் மாநி லத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மேலும் வலுப் படுத்தும் விதத்தில் அதிகாரங்களைப் பரவலாக்குவ தற்கான இரண்டாவது கட்ட நடவடிக்கைகளைத் துவக்கி யது. கடந்த நான்காண்டுகளில், உள்ளாட்சி அமைப்புகள் திட்டச் செலவினங்களில் பெருமளவில் சாதனைகள் படைத்திருக்கின்றன, மாவட்ட அளவிலான திட்டங்களை யும் வகுத்தளித்திருக்கின்றன, இவ்வாறான வகைகளில் திட்டமிடல் நடைமுறைகளையே குறிப்பிடத்தக்க அளவிற்கு நெறிப்படுத்தி இருக்கின்றன. கடந்த நான்காண்டுகளிலும் நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் உள்ளாட்சி அமைப்பு கள் மிகவும் முக்கியமான பங்களிப்புகளை ஆற்றி இருக் கின்றன. இவ்வாறான உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதி காரங்களைப் பரவலாக்கிய கேரளாவின் அனுபவம் மாநி லத்தில் நெருக்கடிகளைச் சமாளித்திட பெரிதும் உதவி இருக்கிறது.
மாநிலத்தில் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கிய மற்றுமொரு அம்சம் என்பது, கூட்டுறவு நிறுவனங்களாகும். நம் சுதந்திர இயக்கத்தின் பாரம்பர்ய மரபின்வழி உருவான கூட்டுறவும், கிராமக் கூட்டுறவு அமைப்புகளும் கேரளாவின் பலமாகும். கேரள மக்கள் மத்தியில் இந்நிறுவனங்கள்மீது அபரிமிதமான நம்பிக்கை இருப்பது, கேரளாவின் வர லாற்றுப் பாரம்பர்யச் சிறப்பாகும். இன்றையதினம், இந்நிறு வனங்கள் கேரளாவின் கிராமப்புற பொருளாதாரத்தின் நடவடிக்கைகளின் முதுகெலும்பாகத் திகழ்கின்றன. தற்போதைய அரசாங்கத்தின் சாதனைகளில் ஒன்றாக, மாநிலத்தில் கேரள வங்கியை அமைத்திருப்பதன் மூலம் மிகப்பெரிய வங்கி வலைப்பின்னலை, கூட்டுறவு அமைப்புமுறையில் வலுப்படுத்தி இருப்பதுமாகும்.
கேரள அரசாங்கம், 2016இல் ஆட்சிக்கு வந்தபோது, அனைவருக்கும் நிரந்தர வீட்டுவசதி, கல்வி உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்தல், ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத் தல், பல்வேறு மட்டங்களிலும் இயங்கும் அரசு மருத்துவ மனைகளிலும் புதிதாக உள்கட்டமைப்பு வசதிகளை உரு வாக்குதல் ஆகிய முக்கியமான வளர்ச்சித் திட்டங்களை முன்வைப்பதன் மூலமாக ‘புதிய கேரளம்’ (‘நவ கேரளம்’) என்னும் தொலைநோக்குத் திட்டத்தை முன்வைத்தது. மேலும் வீணான பொருள்களை மேலாண்மை செய்தல், இயற்கை விவசாயம், நீர் வள மேலாண்மை, சுத்தமான கேரளம் மற்றும் பசுமைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய வற்றை உருவாக்கும் விதத்தில் ‘ஹரிதா கேரளம்’ (‘Haritha Keralam) என்னும் திட்டத்தையும் முன்வைத்தது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் கடந்த நான்காண்டுகளில், வளர்ச்சித் திட்டங்களின் முக்கியமான அம்சங்களைத் தொட்டு, கணிசமான அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள் ளன. உண்மையில், இவை அனைத்தும் இணைந்துதான் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற கேரள அரசாங்கத்திற்குக் கணிசமான பங்களிப்பினைச் செய்திருக்கிறது.
அடுத்து, இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனை என்பது பொதுத்துறை நிறுவனங்க ளின் திறன்களை குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்த் தெடுத்து, அதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு, பொ துத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பினைச் செய்திடும் என்பதைக் காட்டி இருப்பதாகும். மிகவும் தாமத மாக வந்த ‘கெயில்’ (‘GAIL’) எரிவாயு குழாய்களை, சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பதிப்பித்துள்ளது, கொச்சி மெட்ரோ மற்றும் கண்ணூர் விமான நிலையம் முதலிய வற்றைத் திட்டமிட்ட காலத்திற்குள் நிறைவேற்றி இருப்பதும் மாநிலத்தின் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளையும் பெருக்குவதற்கு உதவி இருக்கின்றன.
இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், கேரளாவின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒருங் கிணைந்த சமூக நல நடவடிக்கைகளை அதிக அளவில் எடுத்திருக்கிறது. 2020இல். நல ஓய்வூதியங்கள் (Welfare pensions) பெற்றுவந்த ஒவ்வொருவருக்கும், இரு மடங்குக் கும் மேலாக, அதாவது, 600 ரூபாயிலிருந்து 1,300 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. சமூக நல ஓய்வூதி யங்கள் சுமார் 23 ஆயிரத்து 409 கோடி ரூபாய் இது வரையிலும் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டி ருக்கிறது. முந்தைய ஐஜகூ அரசாங்கம் நல ஓய்வூதியங்க ளுக்காக செலவழித்த தொகை என்பது 9 ஆயிரத்து 270 கோடி ரூபாய் என்பதுடன் ஒப்பிட்டோமானால்தான் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் எந்த அளவிற்கு நல ஓய்வூதியத்திலும் சாதனை படைத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கீழ் இயங்கும் குடும்பஸ்ரீ வலைப்பின்னலும் கேரளத்தின் வளர்ச்சியின் கேந்திரமான பங்களிப்பினைச் செய்திருக்கிறது. இதில் சுமார் 44 லட்சம் உறுப்பினர்கள் சுமார் 2 லட்சத்து 90 ஆயிரம் சுய உதவிக் குழுக்களில் இயங்கிக் கொண்டிருக்கி றார்கள். அவர்கள், நுண்ணிய தொழில்பிரிவுகள் (micro enterprises). விவசாயம், கால்நடை வளர்ப்பு, சந்தை மற்றும் ஆதரவற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு உணவு அளித்திடும் சமூகப் பணிகள் போன்ற பல்வேறு நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது கோவிட்-19 தொற்றுக் காலத்தில், குடும்பஸ்ரீ அமைப்பு மூலமாக, 1,225 சமுதாய உணவுக்கூடங்கள் (community kitchens) நடத்தப் பட்டு வருகின்றன. அவை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நின்று, தேவைப்படும் அனைவருக்கும் இலவச மாக உணவு அளித்து வருகிறது. இதற்கு எவரேனும் பணம் தர முன்வந்தால் அவர்களிடம் 20 ரூபாய் மட்டும் உணவுக் கட்டணமாக வாங்கிக் கொள்கிறார்கள்.
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் மற்றுமொரு மகத்தான சாதனை என்பது, வீடற்ற குடும்பங்க ளுக்கு வீடுகள் கட்டித் தந்திருப்பதாகும். இன்றைய தேதியில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 154 வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிக ளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. ஊரடங்கு காலத்தில் முடங்கிப்போன வேலைகள் மீண்டும் இப்போது தொடங்கப் பட்டிருப்பதால், மேலும் பல வீடுகள் விரைவில் கட்டி முடிக்கப் பட்டு, ஒப்படைக்கப்பட்டுவிடும். ‘ஹரிதா கேரளம்’ திட்டம், 390 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆறுகளைப் புதுப்பித்திருக்கி றது. 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர்நிலைகளை, அவற்றிலிருந்த மாசுபாட்டை அகற்றிப் புதுப்பித்திருக்கிறது.
மத்திய அரசு, கேரள மாநில அரசுக்கு வள ஆதாரங்க ளை வழங்குவதைப் பொறுத்தவரை ஓர் எதிர்மறைப் போக்கைக் கடைப்பிடித்துவந்தபோதிலும், அதன் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம் போன்றவற்றின் கார ணங்களால் நிதி நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தபோதி லும், இவை அனைத்தையும் மீறித்தான் கேரள அரசாங்கம் மேலே கூறியவாறு தேசியப் பேரிடர்களால் விளைந்த சேதங்களைச் சரி செய்து முன்னேறி இருக்கிறது.
மாநிலத்திற்கு மேலே கூறியவாறு திரும்பத்திரும்ப இடர்பாடுகள் வந்தபோதிலும், அவற்றையெல்லாம் ஆட்சி செய்திடும் அரசியல் தலைமை மதிநுட்பத்துடன் சமாளித்த தோடு மட்டுமல்லாமல், தாங்கள் மக்களுக்கு அளித்திட்ட வளர்ச்சித்திட்ட நடவடிக்கைகளையும், சமூக நல நடவ டிக்கைகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றி, முன்னே றிக் கொண்டிருக்கிறது.
இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் ஆட்சி நிறைவு பெறுவதற்கு இன்னும் ஓராண்டு காலமே இருக்கக் கூடிய நிலையில் அது தற்போது கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது. இத்துடன், பொருளாதாரத்தைப் புதுப்பிக்கவும், மக்களின் வாழ்வாதா ரங்களைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை யும் மேற்கொண்டு வருகிறது. கடந்த நான்காண்டு கால அனுபவங்கள், மக்கள் மத்தியில் இடது முன்னணி அரசாங் கத்தின் மீது அளவிடற்கரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. பினராயி விஜயன் அரசாங்கம், தங்களுக்கு அளித்துள்ள அத்தனை உறுதிமொழிகளையும் நிச்சய மாக நிறைவேற்றிடும் என்று அவர்கள் முழுமையாக நம்பு கிறார்கள். இவ்வாறு இந்த அரசாங்கம் மக்களின் நம்பிக் கையை முழுமையாக ஈட்டிய அரசாங்கமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.
நாட்டின் இதர பகுதிகளுக்கு, கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் நவீன தாராளமய - மதவெறி ஆட்சிக்கு எதிராக ஒரு மாற்றைக் காட்டி இருக்கிறது. இவ்வாறு இந்த அரசாங்கம், மக்கள் மத்தியில் ஒற்று மையையும் ஒருமைப்பாட்டையும் வளர்த்தெடுத்திருப்பதை யும், மக்கள் நலக் கொள்கைகளை நிறைவேற்றியிருப்ப தையும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கி இருப்பதையும், சமூக நீதியை உறுதிப்படுத்தி இருப்பதையும், தனியார்மயத்திற்கு சவால்விடும் வகை யில் பொது சுகாதாரம், கல்வி, பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவனங்களை வளர்த்தெடுத்திருப்பதையும் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கிறது.
(மே 27, 2020) தமிழில்: ச.வீரமணி